ஆன்மிகம்
பைரவர்

பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு: பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-11-29 05:57 GMT   |   Update On 2021-11-29 05:57 GMT
நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணசாமி கோவிலில் பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.
கார்த்திகை பைரவாஷ்டமியையொட்டி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகணசாமி கோவிலில் உள்ள சம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு யாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பைரவருக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடந்தது.

இதை தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதேபோல கோவில் குளக்கரையில் தனி சன்னதியில் உள்ள சிம்மவாகன காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவிலில் உள்ள பைரவர், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அஷ்ட பைரவர், தகட்டூர் பைரவர் கோவில் உள்ளிட்ட பைரவர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News