ஆன்மிகம்
அலங்கார உபகார மாதா

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி

Published On 2021-11-15 03:58 GMT   |   Update On 2021-11-15 03:58 GMT
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது.
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா அடுத்த மாதம் 10-ந் தேதி தொடங்கி 19-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், ஜெபமாலை போன்றவை நடக்கிறது.

இந்த திருவிழாவையொட்டி நாதஸ்வரம், பேண்டு வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், வாணவேடிக்கை, மெல்லிசை கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் ‘பாக்கும்படி’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.

திருவிழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் அருட்பணியாளர் ஆண்டனி அல்காந்தர், பங்கு பேரவை துணைத் தலைவர் செல்வராணி ஜோசப், செயலாளர் சுமன், பொருளாளர் தீபக், துணைச்செயலாளர் பினோ, இணை பங்கு தந்தையர்கள் ஜேக்கப் ஆஸ்லின், ஜெப மெர்ஜின், கிங்ஸிலி ஷாஜு மற்றும் அன்பிய ஒருங்கிணைப்பாளர்கள் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News