ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன், தங்கத்தேர்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விரைவில் தங்கத்தேர் இழுக்க நடவடிக்கை

Published On 2021-11-03 06:59 GMT   |   Update On 2021-11-03 06:59 GMT
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் தங்கத்தேர் இழுக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களிலும், பாதயாத்திரையாகவும் வந்து செல்வார்கள். அப்படி வரும் பக்தர்கள் தங்கத்தேர் இழுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தனர். இந்நிலையில் தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருக்கும் தங்கத்தேரை சுத்தப்படுத்தி மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தங்கத்தேர் இழுக்கப்படும் என்று கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
Tags:    

Similar News