ஆன்மிகம்
கள்ளழகர் கோவிலில் ஏகாதசி பூஜை

கள்ளழகர் கோவிலில் ஏகாதசி பூஜை

Published On 2021-11-02 07:10 GMT   |   Update On 2021-11-02 07:10 GMT
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜையை பக்தர்கள் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஐப்பசி மாத சர்வ ஏகாதசி பூஜைகள் நடந்தது. மூலவர் சுவாமிக்கும், உற்சவர் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுக்கும் சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.

அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். மேலும் இக்கோவிலின் உபசன்னதிகளிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Tags:    

Similar News