ஆன்மிகம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்

அருணாசலேஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-08-31 10:18 IST   |   Update On 2021-08-31 10:18:00 IST
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த 27-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவிலின் கோபுர வாயில்கள் அடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து நேற்று கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Similar News