ஆன்மிகம்
திருவட்டார் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடும் மாடம் அமைக்கும் பணி தொடங்கியது

திருவட்டார் கோவிலில் தீபம் ஏற்றி வழிபடும் மாடம் அமைக்கும் பணி தொடங்கியது

Published On 2021-08-27 11:52 IST   |   Update On 2021-08-27 11:52:00 IST
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தீபம் ஏற்றி வழிபட அமைக்கப்பட்டிருந்த விளக்கணி மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டன.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் தமிழக அறநிலையத்துறை மற்றும் தனியாரின் பங்களிப்புடன் ரூ.6½ கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீகிருஷ்ணன், அய்யப்பசாமி சன்னதியை சுற்றி தீபம் ஏற்றி வழிபட அமைக்கப்பட்டிருந்த விளக்கணி மாடங்கள் சேதமடைந்ததால் அவை அனைத்தும் மாற்றப்பட்டன.

தற்போது தனியார் ஒத்துழைப்புடன் ரூ.39 லட்சம் செலவில் புதிதாக விளக்கணி மாடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பணிகள் நேற்று காலை தொடங்கியது. இதையொட்டி தேக்கு மரச்சட்டம் கொண்டு வரப்பட்டு, விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விளக்கணி மாடம் அமைக்கும் பணிகள் வரும் நாட்களில் நடைபெறும் என கோவில் மேலாளர் மோகன்குமார் தெரிவித்தார்.

Similar News