ஆன்மிகம்
விநாயகர்

விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை நடக்கிறது

Published On 2021-08-24 14:28 IST   |   Update On 2021-08-24 14:28:00 IST
திருப்புவனம் அருகே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. அதன்படி சங்கடஹர சதுர்த்தி விழா நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சியளிப்பார். ஆனால் இந்த கோவிலில் தெற்குமுகமாக விநாயகர் அருள்பாலிக்கிறார்.

இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபங்கள், திருமண தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

Similar News