ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபிராம மந்திரத்துக்கு பஞ்சலோக சிலைகள் காணிக்கை

ஸ்ரீகாளஹஸ்தி பட்டாபிராம மந்திரத்துக்கு பஞ்சலோக சிலைகள் காணிக்கை

Published On 2021-08-20 09:40 IST   |   Update On 2021-08-20 09:40:00 IST
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான நேருவீதியில் உள்ள பட்டாபிராம மந்திரத்துக்கு பஞ்சலோகத்தாலான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகளை காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான நேருவீதியில் உள்ள பட்டாபிராம மந்திரத்துக்கு திருப்பதியைச் சேர்ந்த பக்தர்களான மோகன்ரெட்டி-பாக்கியலட்சுமி தம்பதியினர் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பஞ்சலோகத்தாலான சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சிலைகளை காணிக்கையாக வழங்கினர்.

அந்தப் பஞ்சலோக சிலைகளை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு பெற்றுக் கொண்டார். அந்தப் பக்தர்களுக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.

Similar News