ஆன்மிகம்
மாரியம்மன்

வாய்மேடு ஆலடி மாரியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா

Published On 2021-07-31 08:14 GMT   |   Update On 2021-07-31 08:14 GMT
வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், நெய், திருநீறு, சந்தனம், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வாய்மேடு ஆலடி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 24-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து நேற்று அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், நெய், திருநீறு, சந்தனம், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News