ஆன்மிகம்
குதம்பை சித்தர்

மயிலாடுதுறையில் குதம்பை சித்தருக்கு ஆடி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு

Published On 2021-07-21 06:47 GMT   |   Update On 2021-07-21 06:47 GMT
மயிலாடுதுறையில் குதம்பை சித்தருக்கு அபிஷேகம் நடந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி கொண்டு அருளும் குதம்பை சித்தருக்கு ஆடி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் நடந்தது.

நிகழ்ச்சியில் குதம்பை சித்தருக்கு அபிஷேகம் நடந்து சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடந்தது. விழாவில் மயூரநாதர் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபிஷேக அலங்காரத்தை ராஜூ குருக்கள் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News