ஆன்மிகம்
தகட்டூர் ஆகாச மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா

தகட்டூர் ஆகாச மாரியம்மன் குதிரை வாகனத்தில் வீதிஉலா

Published On 2021-07-21 08:30 IST   |   Update On 2021-07-21 08:30:00 IST
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சுப்பிரமணியன்காடு ஆகாச மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சாமி வீதி உலா நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து நேற்று கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றன.

பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதையடுத்து அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து தரிசனம் செய்தனர்.

பின்னர் வாணவேடிக்கையும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News