ஆன்மிகம்
நடராஜருக்கு அபிஷேகம்

தஞ்சை பெரியகோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-07-16 10:25 IST   |   Update On 2021-07-16 10:25:00 IST
தஞ்சை பெரியகோவிலில் ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேசுவரர், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இதில் வராஹி அம்மனுக்கு தற்போது 10 நாட்கள் நடைபெறும் ஆஷாட  நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது.

நடராஜருக்கு ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சனமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு நேற்று ஆனி திருமஞ்சனத்தையொட்டி நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு பால், மஞ்சள், சந்தனம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது.

பின்னர் நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Similar News