ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் -சிவகாமி அம்மன் எழுந்தருளிய காட்சி.

ஆனித் திருவிழா- சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜர் -சிவகாமி அம்மன்

Published On 2021-07-15 03:17 GMT   |   Update On 2021-07-15 03:17 GMT
சிவகாசி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆனித் திருவிழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் -சிவகாமி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
சிவகாசி சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். ஆனால் கொரோன பரவல் காரணமாக கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் இந்த திருவிழா எளிமையான முறையில் நடைபெற்று வருகிறது.

இந்த கோவிலில் நேற்று ஆனித் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில்  சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் -சிவகாமி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

இதில் பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News