ஆன்மிகம்
தென் காளஹஸ்தி கோவில்

தென் காளஹஸ்தி கோவிலில் நடராஜருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2021-07-13 07:23 IST   |   Update On 2021-07-13 07:23:00 IST
ஈத்தாமொழி அருகே உள்ள இலந்தையடி தட்டு தென்காளஹஸ்தி சிவன் கோவிலில் வருகிற 14-ந்தேதி நாக பஞ்சமி ஆனி உத்தரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.
ஈத்தாமொழி அருகே இலந்தையடி தட்டில் தென்காளஹஸ்தி சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருகிற 14-ந்தேதி நாக பஞ்சமி ஆனி உத்தரத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

அன்று பகல் 12 மணிக்கு நடராஜருக்கு 9 வகை அபிஷேகமும், திருமஞ்சன காப்பு சாத்தப்பட்டு, மாணிக்க வாசகர் பெருமானின் சிவபுராணம் பாடப்பட்டு, தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் இங்குள்ள நாகராஜர் மற்றும் ராகு-கேதுவுக்கு அபிஷேக அலங்காரமும், சந்தன காப்பும் நடக்கிறது.

காளசர்ப்ப தோஷம், திருமண தடை, செவ்வாய் நேரடி பார்வை பெற்ற ஜாதகர்களுக்கு ஹோம பரிகாரமும், நாகருக்குரிய 108 கவச பாடல்களும் பாடப்படுகிறது. அதை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தென்காளஹஸ்தி பக்தர்கள் சேவா சங்கத்தினர் செய்து வருகிறார்கள்.

Similar News