ஆன்மிகம்
வடலூர் ஞானசபையில் அகன்ற திரையில் ஜோதி தரிசனம்
வடலூர் சத்திய ஞானசபையில் இந்த மாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஞானசபையின் வெளிப்பகுதியில் அகன்ற திரையில் ஜோதி தரிசனம் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொருமாதமும் பூசம் நட்சத்திரம் அன்று ஜோதி தரிசனம் நடைபெறும். கொரோனா 2-வது அலை ஊரடங்கு காரணமாக ஜோதியை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட வில்லை.
எனவே நேற்று ஆனிமாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாறாக யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஞானசபையின் வெளிப்பகுதியில் அகன்ற திரையில் ஜோதி தரிசனம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியில் அமர்ந்து தரிசனம் செய்தனர்.
எனவே நேற்று ஆனிமாத ஜோதி தரிசனம் பக்தர்கள் இன்றி நடந்தது. ஆனால் ஜோதி தரிசனத்தை பக்தர்கள், வள்ளலார் தெய்வ நிலையம் யூடியூப் சேனல் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாறாக யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது ஞானசபையின் வெளிப்பகுதியில் அகன்ற திரையில் ஜோதி தரிசனம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியில் அமர்ந்து தரிசனம் செய்தனர்.