ஆன்மிகம்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2021-07-05 12:20 IST   |   Update On 2021-07-05 12:20:00 IST
ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கொரோனா தொடர் ஊரடங்கு காரணமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிப்பாட்டு தலங்களில் இயல்பாக சாமி தரிசனம் செய்ய முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தொற்று குறைந்த காரணத்தால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) என்பதாலும், அதை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள் காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

பஸ் போக்குவரத்து இல்லாத காரணத்தால், கார், வேன் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் வந்த ஏராளமான பக்தர்கள், கடந்த இரு தினங்களாக நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம். செய்தனர். பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிந்திருந்தாலும், சமூக இடைவெளி குறைவாகவே காணப்பட்டது. அடுத்து வரும் நாளில் பஸ் போக்குவரத்து இருக்கும் என்பதால், சமூக இடைவெளியை கோவில் நிர்வாகம் கண்காணித்து தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Similar News