ஆன்மிகம்
மண்டைக்காடு கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்

மண்டைக்காடு கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள்

Published On 2021-06-30 10:18 IST   |   Update On 2021-06-30 10:18:00 IST
பஸ்கள் ஓட தொடங்கியதால் தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் வெளியே நின்று சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலமான மண்டைக்காடு  பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. கேரள மாநில பெண்கள் 41 நாட்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்த கோவிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படாத நிலையில், கோவில் அர்ச்சகர்கள் வழக்கம்போல் பூஜையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஸ்கள் ஓட தொடங்கியதால் தற்போது குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மண்டைக்காடு கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவில் நடை அடைக்கப்பட்டிருந்தாலும், அங்கு கோவில் வெளியே நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

Similar News