ஆன்மிகம்
ராமநாதசுவாமி கோவில் மூடப்பட்டுள்ளதால் கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்

ராமநாதசுவாமி கோவில் மூடப்பட்டுள்ளதால் கோபுர தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-06-26 14:50 IST   |   Update On 2021-06-26 14:50:00 IST
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து வருகின்றனர். அனைத்து உள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் தற்போது ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடந்து முடிந்தது. ஆண்டுதோறும் இந்த திருவிழா நடக்கும் நாட்களில் பக்தர்கள் குவிவது வழக்கம். தற்போது பக்தர்களுக்கு அனுமதி இன்றி திருவிழா நடந்து முடிந்தது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கிழக்கு வாசல் பகுதியில் நின்று கோபுரத்தை நோக்கி தரிசனம் செய்தனர்.

Similar News