ஆன்மிகம்
மாங்கனி திருவிழா நிறைவு: பஞ்சமூர்த்திகள், காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சி
மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில், பஞ்சமூர்த்திகள் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சியுடன், காரைக்கால் மாங்கனி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
இறைவனின் திருவாயால் ‘அம்மையே’ என்றழைக்கப்பட்ட பெருமைக்குரியவரும், 63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில், காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டை போ இந்த ஆண்டும் காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில் மாங்கனி திருவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது.
ஆனால், காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பிறகு பக்தர்கள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அந்தவகையில், மாங்கனி திருவிழாவின் 5-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில், பஞ்சமூர்த்திகள் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சியுடன், காரைக்கால் மாங்கனி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் உபயதாரர்கள், குறைவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
ஆனால், காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி மற்றும் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று, முக்கிய நிகழ்ச்சிகளுக்கு பிறகு பக்தர்கள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
அந்தவகையில், மாங்கனி திருவிழாவின் 5-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அதிகாலை கைலாசநாதர் கோவில் பிரகாரத்தில், பஞ்சமூர்த்திகள் காரைக்கால் அம்மையாருக்கு காட்சி தரும் நிகழ்ச்சியுடன், காரைக்கால் மாங்கனி திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி காசிநாதன், அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன்கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் உபயதாரர்கள், குறைவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.