ஆன்மிகம்
காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.

மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்தக்குட ஊர்வலம்

Published On 2021-06-26 06:51 GMT   |   Update On 2021-06-26 06:51 GMT
திருவானைக்காவல் புதுக்காலனியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
திருவானைக்காவல் புதுக்காலனியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கோவில் வளாகத்தில் சிவாச்சாரியர்கள் ஹோம குண்டகளை வளர்த்து யாகம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரியை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் சமூக இடைவெளியில் மறந்து கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News