ஆன்மிகம்
அங்காள பரமேஸ்வரி

ஆனி மாத பவுர்ணமியையொட்டி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-06-25 08:39 GMT   |   Update On 2021-06-25 08:39 GMT
பரமத்தியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பரமத்தியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆனி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.

இதையடுத்து சாமிக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், திருமஞ்சனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாராதனை நடந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
Tags:    

Similar News