ஆன்மிகம்
சமயபுரத்தில் பவுர்ணமியையொட்டி முடிக்காணிக்கை செலுத்தி மாரியம்மனை வணங்கிய பக்தர்கள்

சமயபுரத்தில் பவுர்ணமியையொட்டி முடிக்காணிக்கை செலுத்தி மாரியம்மனை வணங்கிய பக்தர்கள்

Published On 2021-06-25 10:29 IST   |   Update On 2021-06-25 10:29:00 IST
இனாம்சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் முன்பும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இதனால் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்வதற்காக பவுர்ணமி தினமான நேற்று அதிகாலையிலேயே இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். தொடர்ந்து அவர்கள் முடிக்காணிக்கை செலுத்தியும், கோவில் முன்புறம் சூடம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர்.

இதேபோல், இனாம்சமயபுரத்தில் உள்ள ஆதிமாரியம்மன் கோவில் முன்பும் ஏராளமான பக்தர்கள் கார், வேன் போன்ற வாகனங்களில் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

Similar News