ஆன்மிகம்
இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்த காட்சி.

சோலைமலை முருகன் கோவிலில் வருசாபிஷேக விழா

Published On 2021-06-24 13:31 IST   |   Update On 2021-06-24 13:31:00 IST
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும், அழகர்கோவில் மலைமேல் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது.
மதுரையை அடுத்த முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும், அழகர் கோவில் மலைமேல் சோலைமலை முருகன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் வருசாபிஷேக விழா நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி-தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி அருள்பாலித்தனர்.

இதில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Similar News