ஆன்மிகம்
மகா நந்திக்கு மஞ்சள், பால் அபிஷேகம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு அபிஷேகம்

Published On 2021-06-23 06:51 GMT   |   Update On 2021-06-23 06:51 GMT
தஞ்சை பெரிய கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகா நந்திக்கு மஞ்சள், பால் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
மாதந்தோறும் வரும் பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்டுள்ளது. கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களும் உள் விழாவாக நடத்த அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது.

இதன் காரணமாக கோவில்களில் நடக்கும் விழாக்கள் பக்தர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் சிவனுக்கும், நந்திக்கும் பல்வேறு பொருட்களால் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவிலில் மகா நந்திக்கு மஞ்சள், பால், தயிர் இளநீர் மற்றும் திரவிய பொடிகளை கொண்டு சிவாச்சாரியார்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
Tags:    

Similar News