ஆன்மிகம்
ஆனைமலை ரங்கநாதபெருமாள் கோவிலில் வளர்பிறை ஏகாதசி சிறப்பு பூஜை
ஆனைமலை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பச்சரிசிமாவு, பால், தயிர், துளசி பொடி, நெல்லி பொடி, மாதுளை பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில் ஆனி மாத வளர்பிறை ஏகாதாசியை முன்னிட்டு சிறப்பு பூஜை விமரிசையாக நடந்தது. இதையொட்டி சுவாமிகளுக்கு மஞ்சள், சந்தனம், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், கரும்புச்சாறு, பச்சரிசிமாவு, பால், தயிர், துளசி பொடி, நெல்லி பொடி, மாதுளை பொடி கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும், துளசி மாலை, குண்டுமல்லி பூ, செம்பருத்தி பூ, அரளிப்பூ, செண்பகப்பூ அணிவிக்கப்பட்டது. பின், மாம்பழம், ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மட்டுமே பூஜையில் முகக்கவசம், சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், துளசி மாலை, குண்டுமல்லி பூ, செம்பருத்தி பூ, அரளிப்பூ, செண்பகப்பூ அணிவிக்கப்பட்டது. பின், மாம்பழம், ஆப்பிள், வாழை, ஆரஞ்சு, எலுமிச்சை ஆகிய பழங்கள் சுவாமிக்கு படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் நிர்வாகிகள், அர்ச்சகர்கள் மட்டுமே பூஜையில் முகக்கவசம், சமூக இடைவெளிவிட்டு கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.