ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 2 டன் மலர்களால் புஷ்ப யாகம்

Published On 2021-06-19 08:45 GMT   |   Update On 2021-06-19 08:45 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது.
திருப்பதிகோவிந்தராஜசாமி கோவிலில் நேற்று மாலை புஷ்ப யாகம் நடந்தது. முன்னதாக மலர்கள் நிரப்பப்பட்ட பூக்கூடைகள் ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த மலர்கள் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

12 வகையான பூக்கள், 4 வகையான இலைகள் அடங்கிய 2 டன் மலர்களால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடந்தது. அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை ஏகாந்தமாக நடந்தது.

Tags:    

Similar News