ஆன்மிகம்
ஜெகந்நாத பெருமாள்

ஜெகந்நாத பெருமாள் கோவிலில் சிறப்பு ஹோமம்

Published On 2021-06-19 05:54 GMT   |   Update On 2021-06-19 05:54 GMT
கும்பகோணம் அருகே நாதன்கோவி்லில் ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுக்லபட்ச அஷ்டமியையொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
கும்பகோணம் அருகே நாதன்கோவி்லில் ஜெகந்நாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சுக்லபட்ச அஷ்டமியையொட்டி சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

அப்போது செண்பகவள்ளி தாயார் சன்னதியில் யாககுண்டம் அமைத்து காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு ஹோமம் நடந்தது. அதனை தொடர்ந்து

உலக நன்மைக்காகவும், கொரோனா நோய் தொற்று பிடியில் இருந்து உலக மக்களை காப்பாற்ற வேண்டியும் மகா சங்கல்பம் நடந்தது. பின்னர் மூலவர், உற்சவர் சாமிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில் கோவில் பணியாளர்கள், நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெகந்நாத பெருமாள் கோவில் கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News