ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார்

திருப்பதியில் இவரை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்

Published On 2021-06-12 12:14 IST   |   Update On 2021-06-12 12:14:00 IST
திருப்பதிக்கு போகிறவர்கள் ஏழுமலையான் மட்டும் தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள். ஆனால் திருப்பதியில் முதலில் இந்த தெய்வத்தை வழிபட்ட பின்னரே ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும்.
திருப்பதிக்கு போகிறவர்கள் ஆன்லைனிலேயே முன்பதிவு செய்து, அவசர அவசரமாய் ஏழுமலையான் சந்நிதிக்குள் நுழைந்து தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்து விடுகிறார்கள்.

இந்த வழிபாட்டு முறை சரியானது அல்ல. முதலில் நாம் செல்ல வேண்டியது திருச்சானூரிலுள்ள பத்மாவதி தாயார் கோயிலுக்குத் தான். இதை பெருமாளின் திருக்கரமே நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

அவரது ஒரு கரம் கீழ்நோக்கி இருக்கிறது. என் முகத்தைப் பார்க்கும் முன் திருவடியைப் பார். திருவடியில் சரணாகதி அடை என்று சொல்வது போல் உள்ளதாக சிலர் இந்தக் கோலத்தைச் சொல்கிறார்கள்.

இன்னொரு சாராரோ, நீ கீழே இருக்கும் லட்சுமியாகிய பத்மாவதியை பார்த்து விட்டு வந்துவிட்டாயா? அவள் சிபாரிசு செய்தால் தான், என் அருள் உனக்கு கிடைக்கும், என்று சொல்வது போல் உள்ளதாக விளக்கம் சொல்கிறார்கள்.

பொதுவாக, பெருமாள் கோயில்களில் தாயாருக்கு தான் முதல் வணக்கம். பின்பே பெருமாளை வணங்க வேண்டும்.

Similar News