ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் வரை தரிசனம் செய்யலாம்

Published On 2021-06-10 14:09 IST   |   Update On 2021-06-10 14:09:00 IST
நாடு முழுவது பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் வி.ஐ.பி. தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். நாடு முழுவது பல மாநிலங்களில் பகுதிநேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கி உள்ளது.

இந்த வாய்ப்பு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Similar News