ஆன்மிகம்
ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலை

திருப்பதியில் ஆஞ்சநேயர் பிறந்த அஞ்சனாத்ரி மலையில் வளர்ச்சி பணிகள்

Published On 2021-06-10 13:37 IST   |   Update On 2021-06-10 13:37:00 IST
ஆஞ்சநேயர் பிறந்த இடமென தேவஸ்தானம் புராண ஆதாரத்துடன் நிரூபித்த இப்பகுதியில் தேவஸ்தானம் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
திருப்பதி சேஷாசல மலைத் தொடரில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் உள்ள ஆகாச கங்கை பகுதியில் அஞ்சனாதேவி தவம் புரிந்து ஆஞ்சநேயரை பெற்றதாக புராணங்கள் மூலம் தேவஸ்தானம் நிரூபித்துள்ளது.

அதனால் அங்கு அஞ்சனாதேவி சமேத பால ஆஞ்சநேய சாமி கோவிலை ஏற்படுத்தி தேவஸ்தானம் ஜூன் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அனுமன் ஜெயந்தி உற்சவத்தை நடத்தியது.

தினசரி இங்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகளுடன் பாராயணங்களும், கதா காலட்சேபமும் நடந்து வந்தது.

இந்நிலையில் ஆஞ்சநேயர் பிறந்த இடமென தேவஸ்தானம் புராண ஆதாரத்துடன் நிரூபித்த இப்பகுதியில் தேவஸ்தானம் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து பாலஆஞ்சநேயரை வணங்கி செல்வர் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியுள்ளார்.

Similar News