ஆன்மிகம்
கால பைரவருக்கு சிறப்பு பூஜை

கால பைரவருக்கு சிறப்பு பூஜை

Published On 2021-06-03 05:13 GMT   |   Update On 2021-06-03 05:13 GMT
வாடிப்பட்டி லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது. ஊரடங்கு என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்டமடக்கி கண்மாய் கரையில் 36 அடி உயர லிங்க வடிவிலான அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு நேற்று தேய்பிறை அஷ்டமி திதியையொட்டி கொரோனா தாக்கம் விலகிடவும், உலக நன்மைக்காகவும் கால பைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது. ஊரடங்கு என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன் ஏற்பாடுகளை அண்ணாமலையார் அறக்கட்டளை நிர்வாகி கோபிநாத் செய்திருந்தார்.
Tags:    

Similar News