ஆன்மிகம்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை நடக்கிறது

Published On 2021-05-24 10:07 GMT   |   Update On 2021-05-24 10:07 GMT
கொரோனா பரவல் காரணமாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாக திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனோ பரவல் காரணமாக வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் இன்றி எளிமையாக நடைபெற்றது. இந்த ஆண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வைகாசி விசாக திருவிழா நடைபெறுமா என்று பக்தர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே நாளை (செவ்வாய்க்கிழமை) மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாக விழா எளிமையாக நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணிக்கு கோ பூஜை நடக்கிறது.

தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதையடுத்து முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். கொரோனா பரவல் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை. பூஜைகளில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News