ஆன்மிகம்
வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

வில்லியனூர் திருக்காமீசுவரர் கோவிலில் சுவாமிக்கு திருக்கல்யாணம்

Published On 2021-05-24 14:51 IST   |   Update On 2021-05-24 14:51:00 IST
வில்லியனூர் அருகே உள்ள திருக்காமீசுவரர் கோவில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வில்லியனூரில் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வரும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளது. ஆனால் கோவிலின் உள்ளேயே பக்தர்கள் இன்றி விழாக்கள் நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வைகாசி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் கொரோனா பரவலை தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News