ஆன்மிகம்
ரங்கநாதபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.

ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-05-15 06:29 GMT   |   Update On 2021-05-15 06:29 GMT
ஆனைமலையில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அட்சய திருதியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
ஆனைமலையில் பழமையான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அட்சய திருதியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 9 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

பூமாலை, வெட்டிவேர் மாலை மற்றம் தங்க நிறத்தில் ஆன 5 ரூபாய் நாணயம் அலங்காரத்தில் ரங்கநாதரும், ஸ்ரீதேவி, பூதேவியும் அருள்பாலித்தனர். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் கோவில் அர்ச்சகர், கோவில் நிர்வாகிகள் மட்டும் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
Tags:    

Similar News