ஆன்மிகம்
காமாட்சி பரமேஸ்வரி அம்மன்

காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-05-15 05:09 GMT   |   Update On 2021-05-15 05:09 GMT
சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் காமாட்சி பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியில் காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதன்பிறகு அம்மனுக்கு புதிய பட்டாடை சாத்தி மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தீப விளக்குகளால் ஆராதனை காண்பிக்கப்பட்டது.
Tags:    

Similar News