ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் கோவில்

திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா- கிரிவலம் ரத்து

Published On 2021-04-24 09:13 GMT   |   Update On 2021-04-24 12:54 GMT
கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் திருப்பரங்குன்றம் கோவிலில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் :

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் சித்ரா பவுர்ணமி உற்சவ விழா மற்றும் பவுர்ணமி கிரிவலம் விமரிசையாக நடைபெறும்.

ஆனால் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளதால் நாளை மறுநாள் (26-ந்தேதி) அன்று சித்ரா பவுர்ணமி உற்சவ விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சித்ரா பவுர்ணமி கிரிவலமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே சித்ரா பவுர்ணமி நாளில் பக்தர்கள் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News