ஆன்மிகம்
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி உள்பிரகார தேரோட்டம்
கும்பகோணம் ராமசாமி கோவிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு உள் பிரகார தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கட்டுப்பாடுகளுடன் ராமசாமி கோவிலில் ராமநவமி விழா குறைந்த அளவு பக்தர்களுடன் நடைபெற்றது.
விழாவையொட்டி காலை ராமர், லட்சுமணர், சீதாதேவி, அனுமன் உள்ளிட்ட உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு ராமர் லட்சுமணர் சீதாதேவி ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். கொரோனா பரவலை முன்னிட்டு தேர் பவனி கோவிலின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி காலை ராமர், லட்சுமணர், சீதாதேவி, அனுமன் உள்ளிட்ட உற்சவர் சிலைகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பின்னர் தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு ராமர் லட்சுமணர் சீதாதேவி ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் எழுந்தருளினர். கொரோனா பரவலை முன்னிட்டு தேர் பவனி கோவிலின் உள் பிரகாரத்தில் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்.