ஆன்மிகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு

Published On 2021-03-15 10:23 IST   |   Update On 2021-03-15 10:23:00 IST
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடி காணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். நேற்று அமாவாசைதினம் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில்முன்பும், விளக்கு ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடி காணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மேலும், அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் சென்று பயபக்தியுடன் வணங்கி சென்றனர். மேலும் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருவதால் அதிக அளவில் பக்தர்கள் வந்ததைக்காண முடிந்தது.

Similar News