ஆன்மிகம்
திருப்பதி

திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது

Published On 2021-03-13 14:43 IST   |   Update On 2021-03-13 14:43:00 IST
திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 7 மணியில் இரவு 8 மணிவரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 7 மணியில் இரவு 8 மணிவரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வருகின்றனர். 24-ந்தேதி சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர்.

25-ந்தேதி சத்தியபாமா, ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 26-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 27-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 5 சுற்றுகள் பவனி வருகின்றனர். 28-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

இதனால் கோவிலில் 24, 25-தேதிகளில் சகஸ்ர தீபலங்கார சேவை மற்றும் 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Similar News