ஆன்மிகம்
ஸ்ரீகாளஹஸ்தி

ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா முன்னேற்பாடு பணிகள் ஆய்வு

Published On 2021-03-06 07:43 GMT   |   Update On 2021-03-06 07:43 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி  :

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (சனிக்கிழமை) வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 19-ந்தேதி வரை 14 நாட்கள் நடக்கிறது. அதையொட்டி மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட சந்திரசேகரஆசாத் நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலுக்கு வந்து, முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் செல்லும் வழியில் அமைக்கப்பட்டுள்ள கவுண்ட்டர்கள், வீதிஉலாவில் பயன்படுத்தப்படும் தங்க வாகனங்கள், தேர், கோவிலின் மேற்கூரை உள்பட பல்வேறு சன்னதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பக்தர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

கோவிலில் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தா்களுக்கு எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஆய்வின்போது அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News