ஆன்மிகம்
அங்காளம்மன்

பல்லடத்தில் அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா 10-ந்தேதி தொடங்குகிறது

Published On 2021-03-04 08:39 GMT   |   Update On 2021-03-04 08:39 GMT
பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவத்தின் போதும், குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கும் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் குண்டம் திருவிழா வருகிற மார்ச் 10-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் தொடங்குகிறது. 11-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம்,இரவு 7 மணி்க்கு யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, இரவு 10 மணிக்கு முகப்பள்ளயம், மயான பூஜை நடக்கிறது. 12-ந்தேதி காலை 7 மணிக்கு சக்தி விந்தை அலகு தரிசனம்,மாலை 5 மணிக்கு மாவிளக்கு, 5.30 மணிக்கு அக்னி குண்டம் வளர்த்தல், இரவு 7 மணிக்கு அம்மை அழைத்தல், 8 மணிக்கு திருக்கல்யான உற்சவம் நடக்கிறது.

13-ந்தேதி காலை 7 மணிக்கு குண்டம் இறங்குதல், 8.30 மணிக்கு அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல், பிரசாதம் வழங்குதல், 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு கொடி இறக்குதல், காலை 10.15 மணிக்கு மகா அபிஷேகம், மஞ்சள் நீராடல், மாலை 6 மணிக்கு அம்பாள் திருவீதி உலா, நள்ளிரவு பேச்சியம்மன் பூஜை, வசந்த விழா நடைபெறவுள்ளது. திருக்கல்யாண உற்சவத்தின் போது பக்தர்களுக்கு அனுமதியில்லை உற்சவம் முடிந்ததும் தரிசனம் செய்ய முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் அனுமதிக்கபடவுள்ளனர்.

குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கும் அனுமதியில்லை. குண்டம் இறங்குதல் நிகழ்ச்சிக்கு பின் காலை 9 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News