ஆன்மிகம்
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா

Published On 2021-02-15 08:19 IST   |   Update On 2021-02-15 08:19:00 IST
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் புகழ் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள், அலகு காவடி எடுத்து வந்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் புகழ் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள், அலகு காவடி எடுத்து வந்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் புகழ் பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 62-ம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் இருந்து கரகம் எடுத்து நாதஸ்வர மேள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் பக்தர்கள் வீதி உலா வந்தனர்.

தொடர்ந்து கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து பக்தர்கள், அலகு காவடி எடுத்து வந்தவர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

Similar News