ஆன்மிகம்
பழனி முருகன் கோவில் தைப்பூச துளிகள்
தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் மலர்களை கொண்டு ஓம் வடிவில் அலங்காரம் செய்யப்பட்டிருந்த காட்சி.
* தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் சங்கமித்தனர். இதையடுத்து பக்தர்களின் பசியை போக்க ஆங்காங்கே உணவு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
* பழனி அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் மலைக்கோவிலுக்கு அனுப்பியதால் சிரமமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
* குளத்துரோடு, அடிவாரம் ரோடு, பூங்காரோடு உள்ளிட்ட பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன. அதேநேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம், பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
* பழனி பெரியநாயகி அம்மன் கோவில் ரதவீதிகளில் நேற்று தேர் வலம் வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ெஹலிகேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
* மலைக்கோவில் மற்றும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களில், முக கவசம் அணியாதவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
* தேரோட்டத்துக்கு முன்பாக பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரதவீதிகள் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
* பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் தைப்பூச திருவிழாவுக்கு என்று தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நகர் பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மையாக வைத்திருந்தனர்.
* பழனி இடும்பன் மலை பகுதியில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சூரிய தரிசனம் செய்தனர்.
* தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.
* பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.
* பழனி தைப்பூச ேதரோட்டத்தையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டநெரிசலில் பல்லடத்தை சேர்ந்த குமார், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த ஹரிப்பிரியா ஆகியோரின் செல்ேபான்கள் காணாமல் போயின. அதனை, போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
* பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் அடிவார பகுதி மின்னொளியில் ஜொலித்தன. இதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் நலன் கருதி ஒட்டன்சத்திரம்-பழனி, தாராபுரம்-பழனி, உடுமலை-பழனி வரை வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு மின்விளக்குகள் வீதம் ஏராளமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று நடந்த தைப்பூச தேரோட்டத்தையொட்டி, போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* தைப்பூச நாளான நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவல்களை வழங்கினர்.
* பழனி தைப்பூச திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், இடும்பன்குளத்தில் புனித நீராடினர். இதனால் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் ரோந்து சென்றனர்.
* தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றதை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் சங்கமித்தனர். இதையடுத்து பக்தர்களின் பசியை போக்க ஆங்காங்கே உணவு, தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது.
* பழனி அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் மலைக்கோவிலுக்கு அனுப்பியதால் சிரமமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிந்தது.
* குளத்துரோடு, அடிவாரம் ரோடு, பூங்காரோடு உள்ளிட்ட பகுதிகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டன. அதேநேரத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிக சாலைகள் ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
* பழனி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம், பல்வேறு வகையான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.
* பழனி பெரியநாயகி அம்மன் கோவில் ரதவீதிகளில் நேற்று தேர் வலம் வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். இதையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் ெஹலிகேமரா மூலம் கண்காணிக்கப்பட்டது.
* மலைக்கோவில் மற்றும் தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களில், முக கவசம் அணியாதவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது.
* தேரோட்டத்துக்கு முன்பாக பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு ரதவீதிகள் முழுவதும் சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டது.
* பழனி நகராட்சி நிர்வாகம் சார்பில் தைப்பூச திருவிழாவுக்கு என்று தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் நகர் பகுதியில் குப்பைகள் சேராமல் தூய்மையாக வைத்திருந்தனர்.
* பழனி இடும்பன் மலை பகுதியில் நேற்று காலை ஏராளமான பக்தர்கள் சூரிய தரிசனம் செய்தனர்.
* தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நாள் முதற்கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சாரை, சாரையாக பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்தனர்.
* மலர்காவடி, மயில் காவடி, இளநீர் காவடி என பல்வேறு காவடிகளை எடுத்து வந்து பக்தர்கள் அசத்தினர். அலகு குத்தி சில பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
* குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் சிலர் கரும்பு தொட்டிலை சுமந்து வந்தனர்.
* பழனி ரதவீதிகளில் பெண் பக்தர்கள் கோலாட்டம், கும்மியாட்டம் ஆடியபடி வலம் வந்தனர்.
* பழனி தைப்பூச ேதரோட்டத்தையொட்டி நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டநெரிசலில் பல்லடத்தை சேர்ந்த குமார், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த ஹரிப்பிரியா ஆகியோரின் செல்ேபான்கள் காணாமல் போயின. அதனை, போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
* பழனி மலைக்கோவில், திருஆவினன்குடி கோவில் மற்றும் அடிவார பகுதி மின்னொளியில் ஜொலித்தன. இதேபோல் பாதயாத்திரை பக்தர்கள் நலன் கருதி ஒட்டன்சத்திரம்-பழனி, தாராபுரம்-பழனி, உடுமலை-பழனி வரை வழிநெடுகிலும் 10 அடிக்கு ஒரு மின்விளக்குகள் வீதம் ஏராளமான விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று நடந்த தைப்பூச தேரோட்டத்தையொட்டி, போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
* தைப்பூச நாளான நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனால் அடிவாரத்தில் இருந்து சீரான முறையில் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுப்பப்பட்டனர். மலைக்கோவிலுக்கு வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக சேவல்களை வழங்கினர்.
* பழனி தைப்பூச திருவிழாவுக்கு வந்த பக்தர்கள், இடும்பன்குளத்தில் புனித நீராடினர். இதனால் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்வதை தடுக்க தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் ரோந்து சென்றனர்.