ஆன்மிகம்
சக்தி தரும் தைப்பூச காவடி

சக்தி தரும் தைப்பூச காவடி

Published On 2021-01-28 08:52 GMT   |   Update On 2021-01-28 08:52 GMT
தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
கலியுக கடவுள் என பக்தர்களால் அழைக்கப்படும் முருகப்பெருமான் விரும்பி அமர்ந்த மலை ‘பழனி மலை’ ஆகும். இது அறுபடை வீடுகளுள் 3-ம் படைவீடாகவும் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் திருக்கார்த்திகை, பங்குனிஉத்திரம், தைப்பூசம், சூரசம்ஹாரம் உள்ளிட்ட திருவிழாக்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் தைப்பூச திருவிழாவுக்கு மற்ற திருவிழாக்களை காட்டிலும் அதிக அளவில் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியாண்டவனை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். பொதுவாக தைப்பூச திருவிழா வெற்றி விழா எனவும் அழைக்கப்படுகிறது. தைப்பூச நன்னாளில் பழனிக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுபவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தை மாதத்தில் பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கல நாள் அன்று முருகப்பெருமானை வேண்டி கொண்டாடப்படும் வெற்றி திருவிழாவாக தைப்பூசம் திகழ்கிறது.

முருகப்பெருமான் தன் அன்னையாகிய உமாதேவியாரிடம் ‘தாரகன்’ என்ற அசுரனை சம்ஹாரம் (வதம்) செய்வதற்காக “வெற்றிவேல்” வாங்கிய நாளே தைப்பூச நாளாகும்.

தாரகனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்ட தினமே தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளாகும். இதனை போற்றும் விதமாக தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் 10 நாட்கள் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். நம் துன்பங்கள் நீங்க தைப்பூச நன்னாளில் பழனி முருகப்பெருமானின் அருளை பெற்று சிறப்புடன் வாழ்வோம்.
Tags:    

Similar News