ஆன்மிகம்
கோவில் உண்டியலில் காணிக்கை

கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினால் கிடைக்கும் பலன்கள்

Published On 2021-01-28 12:24 IST   |   Update On 2021-01-28 12:24:00 IST
பணத்தை காணிக்கையாக அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்றவற்றை காணிக்கையாக வழங்குவதால் நோய்கள், பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆயுள் அதிகரிக்கும்.
முருக பக்தர்கள் தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழாக்களில் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர் முருகனை வழிபட்டு உண்டியலில் பக்தியோடும், மகிழ்ச்சியோடும் காணிக்கைகளை செலுத்துகின்றனர். இதனால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன என்று பக்தர்கள் மனமுருக கூறுகின்றனர்.

பணத்தை காணிக்கையாக அளிப்பதால் செல்வம் பெருகும். சேவல், புறா போன்றவற்றை காணிக்கையாக வழங்குவதால் நோய்கள், பில்லி, சூனியம் உள்ளிட்டவை நீங்கி ஆயுள் அதிகரிக்கும். உழவு செழிக்க வேண்டும் என்பதற்காக விவசாயிகள் பசு, சேவல் போன்றவற்றையும் காணிக்கையாக செலுத்துகின்றனர். அதேபோல் முருகன் கோவிலில் அன்னதானம் என்பது சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தானத்தால் குடும்பத்தில் முருகப்பெருமானே ஆண் குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகமாக உள்ளது.

Similar News