ஆன்மிகம்
சிதம்பரம் நடராஜர்

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா: டிராக்டர் மூலம் தேர் இழுக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு

Published On 2020-12-19 13:36 IST   |   Update On 2020-12-19 13:36:00 IST
கொரோனா தொற்று காரணமாக சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் பங்கேற்காமல் டிராக்டர் மற்றும் புல்டோசர் மூலம் தேர் இழுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனவிழா வருகிற 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தேரோட்டம் 29-ந் தேதியும், ஆருத்ரா தரிசனவிழா 30-ந் தேதியும் நடக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக விழாவில் பக்தர்கள் பங்கேற்காமல் டிராக்டர் மற்றும் புல்டோசர் மூலம் தேர் இழுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இதற்கு நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து நடராஜர் கோவில் தேரை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர். தேரின் ஸ்திரத்தன்மை, தேர் சக்கரத்தின் நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது பொது தீட்சிதர்கள் உடன் இருந்தனர்.

தேரை பார்வையிட்ட தொழில்நுட்ப பொறியாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தபிறகு டிராக் டர், புல்டோசர் மூலம் தேர் இழுப்பதா? என முடிவு செய்யப்படும்.

இதுகுறித்து தீட்சிதர்கள் கூறுகையில் தேர்திருவிழா என்பது பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுப்பதே ஆகும். தேரை எந்திரம் மூலம் இழுத்துசெல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. நடராஜர், சிவகாமி அம்மன் தேர்கள் மிகப்பெரியது. இந்த தேர்களை எந்திரம் மூலம் இழுத்து சென்றால் சுவாமிகளுக்கு பாதுகாப்பு இருக்காது என்றனர்.

Similar News