ஆன்மிகம்

மதுரை கள்ளழகர் அணிந்த பட்டு வஸ்திரத்தில் காட்சி அளித்த ஆண்டாள்

Published On 2019-04-27 06:40 GMT   |   Update On 2019-04-27 06:40 GMT
மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மதுரையில் ஆற்றில் அழகர் இறங்கும் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து கொண்டு இறங்கினார்.

இதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை ஆண்டாள் கோவில் நிர்வாகத்தினர் மதுரைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கு பதிலாக மதுரையில் கள்ளழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் மதுரை அழகர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அனுப்பப்பட்டது.

இந்த பட்டு வஸ்திரத்தை ஆண்டாளுக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று மாலை ஆண்டாள் கோவிலில் நடைபெற்றது. இதற்காக ஆண்டாள்-ரெங்கமன்னார் குறடு மண்டபத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து அழகர் அணிந்திருந்த பட்டு வஸ்திரம் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News