ஆன்மிகம்
சித்திரை திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டபோது எடுத்தபடம்.

சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2019-04-11 09:28 GMT   |   Update On 2019-04-11 09:28 GMT
சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கர நாராயண சுவாமி கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கோவில் யானை கோமதி பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை 6.10 மணிக்கு சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் சுவாமி, அம்பாள் வீதிஉலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடக்கிறது.

Tags:    

Similar News