ஆன்மிகம்
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள விநாயகர் கோவில் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை அன்பர்க்கு காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார்.
திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பாதையின் தொடக்கத்தில் தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகப் பெருமான் தம் தம்பியாகிய செந்தில் வேலவன் இருக்கும் இடத்தை அன்பர்க்கு தூண்டிக் காண்பிக்கும் வகையில் எழுந்தருளியுள்ளதால் இப்பெயர் பெற்று விளங்குகின்றார். இவரை வணங்கிய பின் கடற்கரை கோவிலுக்கு செல்லுதல் வேண்டும் என்பது முறை.
ஊர் நுழைவாயில் முதல் கடற்கரையில் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில் வரையில் மூன்று பர்லாங்கு தொலைவு உள்ளது. இந்த தொலைவு முழுவதும் மண்டப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் வெயில், மழை படாவண்ணம் இம்மண்டப பாதையில் செல்ல முடிகின்றது.
ஊர் நுழைவாயில் முதல் கடற்கரையில் உள்ள முருகப்பெருமான் திருக்கோவில் வரையில் மூன்று பர்லாங்கு தொலைவு உள்ளது. இந்த தொலைவு முழுவதும் மண்டப்பாதையாக அமைக்கப்பட்டுள்ளது. அன்பர்கள் வெயில், மழை படாவண்ணம் இம்மண்டப பாதையில் செல்ல முடிகின்றது.