ஆன்மிகம்

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது?

Published On 2017-05-08 08:52 GMT   |   Update On 2017-05-08 08:52 GMT
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு கிரிவலம் சென்றால் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்கிறார்கள்.

இந்த மாதம் சித்ரா பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு பவுர்ணமி தொடங்கி நாளை மறுதினம் (புதன்கிழமை) அதிகாலை 3.27 மணி வரை பவுர்ணமி உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.
Tags:    

Similar News